நாகை மாவட்டம் மயிலாடுதுறையில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர் கூறியதாவது, கேந்திர வித்யாலயா பள்ளிகளின் ஆறாம் வகுப்பு வினாத்தாளில் ஜாதி மதரீதியான கேள்விகள் இடம் பெற்றிருப்பதாக திமுக தலைவர் ஸ்டாலின் சமூக வலைதளங்களில் பதிவு செய்தார். இந்த பதிவிற்கான எந்த ஆதாரமும் இதுவரை கண்டறியப்படவில்லை.
தமிழ்நாடு, பாண்டிச்சேரி மாநிலங்களைச் சேர்ந்த 49 கேந்திர வித்யாலயா பள்ளிகளில் அப்படி எந்த கேள்வியும் இடம் பெறவில்லை. இதிலிருந்து திமுக, சமூக வலைதளங்களில் பொய்களை மட்டுமே பரப்புவதை வேலையாகக் கொண்டுள்ளது என்பது தெளிவாகிறது.