தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

நாகை எல்லைப் பகுதியில் கடும் சோதனை: இ-பாஸ் இல்லாதவர்களுக்கு அனுமதி மறுப்பு - கரோனா தொற்று

நாகப்பட்டினம்: மாவட்டத்தின் 11 எல்லைகளிலும் கடும் சோதனைகள் செய்யப்பட்டு வரும் நிலையில், இ-பாஸ் இல்லாமல் வரும் வாகனங்கள் காவல் துறையினரால் திருப்பி அனுப்பப்பட்டு வருகின்றன.

Heavy raid in border
Heavy raid in border

By

Published : Jun 25, 2020, 2:04 PM IST

தமிழ்நாட்டில் கரோனா தொற்று பாதித்தவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், இன்று (ஜூன் 25) முதல் தமிழ்நாடு அரசு கடும் கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.

நாகை மாவட்டத்தின் 11 எல்லைப் பகுதிகளிலும் சோதனைச் சாவடிகள் அமைத்து காவல் துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலவாஞ்சூர், கானூர், கொள்ளிடம், நண்டலார் உள்ளிட்ட பகுதிகளில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ள காவல் துறையினர் இருசக்கர வாகனம், நான்கு சக்கர வாகன ஓட்டிகளிடம் அடையாள அட்டை, இ-பாஸ் உள்ளிட்டவைகளை ஆய்வு செய்து மாவட்டத்தின் உள்ளே அனுமதிக்கின்றனர்.

இந்நிலையில், தமிழ்நாடு எல்லையான மேலவாஞ்சூர் சோதனைச்சாவடியில் காரைக்கால் மட்டுமின்றி பிற மாவட்டங்களைச் சேர்ந்த பொதுமக்களுக்கும் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இதேபோல், புதுவை மாநிலம் காரைக்காலை அடுத்த வாஞ்சூர் சோதனைச்சாவடியில் காவல் துறையினர் கடும் கட்டுப்பாடுகளை விதித்துள்ளனர்.

குறிப்பாக, வெளிமாநில வாகனங்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டதால் நீண்ட வரிசையில் லாரிகள் காத்திருக்கின்றன.

ABOUT THE AUTHOR

...view details