புதுச்சேரி மாநிலம் காரைக்காலிலிருந்து சுமார் 75 நாட்டிகல் மைல் தொலைவில் கடலில் எல்லை தாண்டி, தடைசெய்யப்பட்ட வலைகளைப் பயன்படுத்தி இலங்கை மீனவர்கள் ஆறு பேர் மீன் பிடித்துக்கொண்டிருந்தனர்.
அவர்கள் ஆறு பேரை ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த இந்திய கடற்படையினர் கடந்த 22ஆம் தேதி நடுக்கடலில் படகுடன் கைதுசெய்தனர்.
அதனைத் தொடர்ந்து இன்று அவர்களை படகுடன் காரைக்கால் தனியார் துறைமுகத்திற்கு கொண்டுவந்த இந்திய கடற்படையினரின் மேற்படி நடவடிக்கைகளுக்காக நாகை கடலோர காவல்படை குழும காவல் ஆய்வாளர் ராஜா தலைமையிலான காவலர்களிடம் ஒப்படைத்தனர்.