தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மகளிர் சுயதொழில் தொடங்க 39 லட்சம் ரூபாய் அரசு நலத்திட்ட கடன் உதவி! - அரசு நலத்திட்ட கடன் உதவி

நாகப்பட்டினம்: மயிலாடுதுறையில் நகர கூட்டுறவு வங்கியில், மகளிர் சுயதொழில் தொடங்க 7 மகளிர் சுய உதவிக் குழுவினருக்கு 39 லட்சம் ரூபாய் அரசு நலத்திட்ட கடன் உதவி வழங்கப்பட்டது.

பிரதமர் நரேந்திர மோடி உரை
பிரதமர் நரேந்திர மோடி உரை

By

Published : Nov 5, 2020, 7:16 PM IST

நாகப்பட்டினம் மயிலாடுதுறையிலுள்ள மாயூரம் நகர கூட்டுறவு வங்கியில், மகளிர் சுயஉதவிக் குழுவினர், சுயதொழில் தொடங்க அரசு நலத்திட்ட கடன் உதவி வழங்கும் விழா நடைபெற்றது.

வங்கியின் நிர்வாக இயக்குநர் உமாதேவி தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், ஆவாரம்பூ, சந்தான மலர், நட்பு, வெண்மேகம்,நட்சத்திரா, புஷ்பாஞ்சலி, கீதாஞ்சலி ஆகிய 7 சுயஉதவிக் குழுவினருக்கு 39 லட்சத்து 39 ஆயிரம் ரூபாய் கடனுதவியை வங்கித் தலைவர் வி.ஜி.கே. செந்தில்நாதன் வழங்கினார்.

இந்த நிகழ்ச்சியில், வங்கி பொதுமேலாளர் பாலகிருஷ்ணன், அதிமுக நிர்வாகிகள் உள்ளிட்ட கலந்துகொண்டனர்.

இதையும் படிங்க: ஊராட்சி குழுவிற்கு ஒதுக்கப்பட்ட நிதியில் குளறுபடி!

ABOUT THE AUTHOR

...view details