மயிலாடுதுறை: மாவட்டத்தில் 37 இடங்களில் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு வழிபாடு நடைபெற்றது. அரண்மனை நகரில் உள்ள மேதா ஸ்ரீகணபதி கோயிலில் நடைபெற்ற விநாயகர் சதுர்த்தி விழாவில், தருமபுரம் ஆதீன 27-வது மடாதிபதி ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இதுகுறித்து தருமபுரம் ஆதீனம் பேசுகையில், "விநாயகப் பெருமானை வழிபட்டு தொடங்கும் அனைத்து காரியங்களும் நலமாக நடைபெறும். இப்பகுதி விவசாய பகுதி. விவசாயிகளுக்காக காவிரியைக் கொண்டுவந்தது விநாயகப் பெருமான் என்கிறது புராணம். விநாயகர் வழிபாடு செய்யாமல் எந்தகாரியத்தையும் தொடங்கக் கூடாது.