தமிழ்நாடு

tamil nadu

முழு ஊரடங்கு:மயிலாடுதுறையில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கடைகள் அடைப்பு

By

Published : Jul 5, 2020, 2:45 PM IST

நாகப்பட்டினம்: ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு காரணமாக மயிலாடுதுறையில் ஐந்தாயிரத்திற்கும் மேற்பட்ட கடைகள் அனைத்தும் இன்று அடைக்கப்பட்டன.

மயிலாடுதுறை
மயிலாடுதுறை

கரோனா தொற்று பரவலைத் தடுப்பதற்காக ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமை அன்றும் முழு ஊரடங்கு கடைப்பிடிக்கப்படும் என்று தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. அந்த வகையில், ஞாயிற்றுக்கிழமையான இன்று (ஜூலை 5) நாகை மாவட்டம் மயிலாடுதுறையில் முழு ஊரடங்கு உத்தரவால் கடைகள் அனைத்தும் அடைக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில், மயிலாடுதுறை முழுவதும் உள்ள ஐந்தாயிரத்திற்கும் மேற்பட்ட கடைகள் அடைக்கப்பட்டுள்ளன. மேலும் பெட்ரோல் பங்குகள், இறைச்சிக் கடைகள் மூடப்பட்டன. ஆட்டோ, கார் உள்ளிட்ட வாடகைக்கு செல்லும் வாகனங்களும் இயங்கவில்லை.

இதேபோல், மயிலாடுதுறை மாவட்டத்தில் செம்பனார்கோவில், மங்கநல்லூர், மணல்மேடு, குத்தாலம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் அனைத்துக் கடைகளும் அடைக்கப்பட்டிருந்தன. முழு ஊரடங்கு காரணமாக பொதுமக்கள் வீடுகளிலேயே முடங்கி உள்ளனர்.

இதையும் படிங்க:'ஊரடங்கு தளர்த்தப்பட்டும் பயனில்லை... பேருந்து வசதி இருந்தால் மட்டுமே குடும்பத்தைக் காப்பாற்ற முடியும்'

ABOUT THE AUTHOR

...view details