நாகையை அடுத்த பனங்குடியில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம், தனியார் கண் மருத்துவமனை சார்பில் சுமை தூக்கும் தொழிலாளர்கள், கிடங்கு பணியாளர்கள் ஆகியோர்களுக்கான இலவச கண் சிகிச்சை முகாம் நடைபெற்றது.
இந்த காமை நாகை மாவட்ட ஆட்சியர் பிரவீன் நாயர் குத்து விளக்கேற்றி தொடங்கி வைத்தார். இதில், சுமை தூக்கும் தொழிலாளர்கள், கிடங்கு பணியாளர்கள், திறந்தவெளி சேமிப்பு மையம், நவீன அரிசி ஆலையில் பணிபுரியும் தொழிலாளர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.