தமிழ்நாடு

tamil nadu

By

Published : Oct 4, 2019, 6:01 PM IST

ETV Bharat / state

சுமைதூக்கும் தொழிலாளர்களுக்கு  இலவச கண் சிகிச்சை - நுகர்பொருள் வாணிபக் கழகம் ஏற்பாடு!

நாகை: பனங்குடி அருகே சுமை தூக்கும் தொழிலாளர்களுக்கான இலவச கண் சிகிச்சை முகாம் நடைபெற்றது.

naagai

நாகையை அடுத்த பனங்குடியில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம், தனியார் கண் மருத்துவமனை சார்பில் சுமை தூக்கும் தொழிலாளர்கள், கிடங்கு பணியாளர்கள் ஆகியோர்களுக்கான இலவச கண் சிகிச்சை முகாம் நடைபெற்றது.

இந்த காமை நாகை மாவட்ட ஆட்சியர் பிரவீன் நாயர் குத்து விளக்கேற்றி தொடங்கி வைத்தார். இதில், சுமை தூக்கும் தொழிலாளர்கள், கிடங்கு பணியாளர்கள், திறந்தவெளி சேமிப்பு மையம், நவீன அரிசி ஆலையில் பணிபுரியும் தொழிலாளர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

தொழிலாளர்களுக்கு, இலவசமாக கண் பரிசோதனைகள் செய்யப்பட்டு மருந்துகள், மாத்திரைகள், கண்ணாடிகள் வழங்கப்பட்டன.

இலவச கண் சிகிச்சை முகாம்

இதையும் படிங்க:

டெங்கு இல்லாத புதுக்கோட்டை... விழிப்புணர்வு முகாமில் பேசிய மாவட்ட ஆட்சியர்

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details