கரோனா ஊரடங்கு காரணமாக மார்ச் 25ஆம் தேதிமுதல் பொதுப் போக்குவரத்துக்குத் தடைவிதிக்கப்பட்டது. அதையடுத்து ஊரடங்கு தளர்வுகளின் அடிப்படையில் ஜூன் 1ஆம் தேதிலிருந்து அரசுப் பேருந்துகளும், ஜூன் 9ஆம் தேதிலிருந்து தனியார் பேருந்துகளும் இயக்கப்பட்டன.
அதில் 60 விழுக்காடு பயணிகளுடன் மட்டும் பேருந்துகளை இயக்க வேண்டும், மண்டலத்திற்குள் மட்டுமே இயக்க வேண்டும் உள்ளிட்ட கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டன.
இந்த நிலையில், நாகப்பட்டினம் மயிலாடுதுறையிலிருந்து நீடூர், பட்டவர்த்தி, வைத்தீஸ்வரன் கோயில், சீர்காழி வழியாகக் கொள்ளிடம் வரை இயக்கப்படும் 'பவித்ரன்' என்ற தனியார் பேருந்து கட்டணமின்றி இயக்கப்பட்டுவருகிறது.