நாகப்பட்டினம், சீர்காழி உள்ளிட்ட பகுதிகளில் நேற்று காலை இடி, மின்னலுடன் கனமழை பெய்தது. மேலவல்லம் கிராமத்தில் இடி தாக்கியதில் அதேக் கிராமத்தைச் சேர்ந்த சுந்தரமூர்த்தி, அவரது மனைவி எழிலரசி, மகள் நிஷாந்தி உள்ளிட்ட மூன்று பேர் காயம் அடைந்தனர்.
இதுமட்டுமல்லாமல் சுந்தரமூர்த்தி வீட்டில் இருந்த மின்சாதன பொருட்களான குளிர்சாதன பெட்டி, மின்மோட்டார், டீ.வி, மின்சார அடுப்பு உள்ளிட்ட பொருட்கள் சேதமடைந்தது. சத்தம் கேட்டு ஓடி வந்த அக்கம் பக்கத்தினர் காயமடைந்தவர்களை மீட்டு சீர்காழி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதித்தனர்.