மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகேயுள்ள பழையார் கிராமத்தைச் சேர்ந்தவர் பிரபாகரன். இவர் தனக்கு சொந்தமான விசைப்படகில் 7 பேருடன் கடலுக்குள் மீன்பிடிக்க சென்றுள்ளார்.
அப்பொழுது பழையார் துறைமுகத்தில், இவர்கள் ஏற்கனவே மீன் பிடித்துக் கொண்டிருந்த ராமநாதபுரம் மாவட்டம் நரிப்பையூரைச் சேர்ந்த சக்கரை முகமது, அவரது மகன் முகமது ஃபரீது (31) ஆகியோரை சந்தித்துள்ளனர். பின்னர் அவர்கள் அனைவரும் இணைந்து பழையார் துறைமுகத்தில் மீன்பிடித்துக் கொண்டிருந்தனர்.
திடீரென ஏற்பட்ட கடல் சீற்றத்தால் முகமது ஃபரீது விசை படகிலிருந்து தவறி விழுந்து மாயமானார்.