மயிலாடுதுறை,மாவட்டம் சீர்காழியை அடுத்த பூம்புகார் மீனவர் கிராமத்தில் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு ரூபாய் 140 கோடி மதிப்பீட்டில் மீன் இறங்கு தளம் மீன் ஏலக்கூடம் உள்ளிட்ட வசதிகளுடன் புதிய மீன்பிடி துறைமுகம் அமைக்கப்பட்டது.
இத்துறைமுகத்தின் மூலம் நாள்தோறும் 5 ஆயிரத்திகும் மேற்பட்ட மீனவர்கள் விசைப்படகு, பைபர் படகு, நாட்டு படகுகள் மூலம் மீன்பிடி தொழில் செய்து வருகின்றனர். இந்நிலையில் மீன்வளத்துறை ஆணையர் பழனிச்சாமி ஐஏஎஸ் இன்று (மே14) துறைமுகத்தை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.