தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

வயலில் அறுந்து விழுந்த மின் கம்பியை சரி செய்ய விவசாயிகள் கோரிக்கை - மின் வாரியத்தால் பாதிஇக்கப்பட்ட விவசாயிகள்

மயிலாடுதுறை அருகே அறுந்து விழுந்த மின்கம்பியை மின்சாரத்துறையினர் சரி செய்யாததால் மின்மோட்டார்கள் மூலம் தண்ணீர் பாய்ச்ச முடியாமல் சம்பா நெற் பயிர்கள் கருகும் நிலை ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் குற்றஞ்சாடியுள்ளனர்.

வயலில் அறுந்து விழுந்த மின் கம்பியை சரி செய்ய விவசாயிகள் கோரிக்கை
வயலில் அறுந்து விழுந்த மின் கம்பியை சரி செய்ய விவசாயிகள் கோரிக்கை

By

Published : Dec 20, 2021, 9:50 AM IST

மயிலாடுதுறை :கொற்கை ஊராட்சியில் 500 ஏக்கர் நிலப்பரப்பில் சம்பா நெல் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. கடந்த மாதம் பெய்த தொடர் மழையின் காரணமாக மேட்டு கொற்கை பகுதியில் டிரான்ஸ்பார்மரில் இருந்து வரும் மின் கம்பி அறுந்து விழுந்தது. இதனால் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது.

கருகிய பயிர்கள்

அப்பகுதியில் விவசாயபணிக்காக உள்ள 8 மின் மோட்டார்களை இயக்க முடியாததால் 25 ஏக்கர் நெற்பயிர்களுக்கு விவசாயிகளால் தண்ணீர் பாய்ச்ச முடியவில்லை. தண்ணீரின்றி வறட்சியால் வயல்களில் வெடிப்பு ஏற்பட்டு சம்பா பயிர்கள் கருகி வருகிறது.

இதுகுறித்து அப்பகுதி விவசாயிகள் பலமுறை மின்சார வாரிய அலுவலகத்திற்கு தகவல் அளித்தும் அறுந்து விழுந்த மின்கம்பியை இதுவரை சரி செய்யவில்லை. இதனால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.

கோரிக்கை

2 மாதத்தில் நெல் பயிர்கள் கதிர் கட்டும் நிலையில் காய்ந்து கருகி வருவதால் மின்சார வாரிய அலுவலர்கள் உடனடியாக அறுந்து விழுந்த மின்கம்பியை சரி செய்து தங்குதடையின்றி மின்சாரம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

வயலில் அறுந்து விழுந்த மின் கம்பியை சரி செய்ய விவசாயிகள் கோரிக்கை

இதுகுறித்து நீடூர் உதவி மின் பொறியாளர் மூர்த்தி கூறுகையில் ஏராளமான மரங்களின் கிளைகள் முறிந்து மின்கம்பியில் விழுவதால் மரக்கிளைகள் வெட்டும் பணி நடைபெற்று வருவதாகவும், இதனால் மின் இணைப்பு வழங்கத் தாமதம் ஏற்பட்டுள்ளதாகவும் விரைவில் சரி செய்யப்படும் என்றும் தெரிவித்தார்.

இதையும் படிங்க:உதயநிதி ஸ்டாலின் அமைச்சராக வர வேண்டும் - அமைச்சர் செந்தில் பாலாஜி

ABOUT THE AUTHOR

...view details