நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யத்தை அடுத்த பாசன வாய்காலான அடப்பாற்றில் நீர் திறக்க வலியுறுத்திய விவசாயிகள், இயக்கு அணையில் படுத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஜூன் 12ஆம் தேதி மேட்டூர் அணையில் இருந்து திறக்கப்பட்ட நீர், வேதாரண்யம் பகுதி அடப்பாற்றின் தலைமடையான மணலி இயக்கு அணை வரை வந்துள்ளது. ஆனால், குடிமராமத்து பணிகளால் கடைமடைக்கு நீர் திறக்கவில்லை. இதனால், காவிரி நீரை நம்பி குறுவை சாகுபடி செய்யப்பட்டுள்ள ஆயிரக்கணக்கான ஏக்கர் விவசாய நிலம் பாதிக்கப்பட்டுள்ளது.