தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சோறு போடும் விவசாயி வீட்டில் 'கை' வரிசை காட்டிய கொள்ளையர்கள்! - nagappatinam

நாகை: சீர்காழி அருகே விவசாயி வீட்டில் ரூ.2 லட்சம் ரொக்கப்பணம், 6 பவுன் நகை ஆகியவற்றை திருடி சென்ற நபர்களை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

விவசாயி வீட்டில் 2 லட்சம் ரொக்கம் கொள்ளை

By

Published : Jul 1, 2019, 3:57 PM IST

நாகை மாவட்டம், சீர்காழி அருகே கடவாசல் கிராமத்தைச் சேர்ந்தவர் மாரியப்பன்; விவசாயி. இவர் குடும்பத்துடன் நேற்று மேல்மருவத்தூர் கோவிலுக்கு சென்றுவிட்டு இரவு வீடு திரும்பியுள்ளார். அப்போது, வீட்டின் கதவு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்த மாரியப்பன் உள்ளே சென்று பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.

விவசாயி வீட்டில் 2 லட்சம் ரொக்கம் கொள்ளை

பீரோ உடைக்கப்பட்டு அதில் வைத்திருந்த ரூ.2 லட்சம் ரொக்கப் பணம், 6 சவரன் தங்க நகை, செல்போன், கம்ப்யூட்டர் உள்ளிட்ட பொருட்களை அடையாளம் தெரியாத நபர்கள் கொள்ளையடித்து சென்றது தெரிய வந்தது. இது குறித்து, மாரியப்பன் அளித்த புகாரின் பேரில் புதுப்பட்டினம் காவல்துறையினர் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ABOUT THE AUTHOR

...view details