தமிழ்நாடு

tamil nadu

By

Published : Aug 27, 2020, 3:12 PM IST

ETV Bharat / state

மின்கம்பியை மிதித்து விவசாயியும், 2 மாடுகளும் உயிரிழப்பு!

நாகப்பட்டினம்: சேமங்கலம் அருகே அறுந்துகிடந்த மின்கம்பியை மிதித்த இரண்டு மாடுகளும், விவசாயி ஒருவரும் பரிதாபமாக உயிரிழந்தனர்.

died
died

நாகப்பட்டினம் மாவட்டம் சேமங்கலம் அருகே புதுார் மாரியம்மன் கோயில் தெருவைச் சேர்ந்த பாலகிருஷ்ணன் மகன் சீதாராமன்(26). இவர் இன்று (ஆக.27) காலை இரண்டு மாடுகளை மேய்ச்சலுக்காக வயலுக்கு அழைத்துச் சென்றுள்ளார். அப்போது அம்மைநாதன் என்பவரின் வயல் வழியாக செல்லும்போது நேற்று (ஆக.26) காற்றுடன் பெய்த மழையின் காரணமாக மின்கம்பி அறுந்து கிடந்ததாகக் கூறப்படுகிறது.

அவ்வழியாகச் சென்ற சீதாராமனும், இரண்டு மாடுகளும் மின்கம்பியை மிதித்ததில் மாடுகள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தன. இதில், மின்சாரம் தாக்கி தூக்கி எறியப்பட்டு மயங்கிக் கிடந்த சீதாராமனை அப்பகுதி விவசாயிகள் மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு கொண்டுச் சென்றனர்.

மாடுகள் உயிரிழப்பு
அங்கு மருத்துவர் பரிசோதனை செய்து, உயிரிழந்ததாகத் தெரிவித்ததால் சீதாராமனின் உடல் உடற்கூறாய்வு கூடத்தில் வைக்கப்பட்டது. இச்சம்பவம் தொடர்பாக பாகசாலை காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தங்கள் பகுதியில் மின்கம்பிகள் தாழ்வாக செல்வதாகவும், மின்வாரிய அலுவலர்கள் உடனடி நடவடிக்கை எடுக்காததால் உயிரிழப்பு ஏற்பட்டதாக வேதனையுடன் கூறுகின்றனர்.

ABOUT THE AUTHOR

...view details