தமிழ்நாடு

tamil nadu

By

Published : Aug 1, 2020, 12:30 PM IST

ETV Bharat / state

ஊரடங்கால் வெறிச்சோடிய உலக புகழ்பெற்ற நாகூர் தர்கா!

நாகப்பட்டினம்: ஊரடங்கு காரணமாக உலக புகழ்பெற்ற நாகூர் தர்கா பக்ரீத் நாளில் வெறிச்சோடி காணப்பட்டது.

நாகப்பட்டினம் நாகூர் தர்கா
நாகப்பட்டினம் நாகூர் தர்கா

இஸ்லாமியர்களின் முக்கியப் பண்டிகையான தியாகத் திருநாள் எனும் பக்ரீத் பண்டிகை ஆண்டுதோறும் விமர்சையாக கொண்டாடப்படும்.

தற்போது ஊரடங்கு அமலிலுள்ளதால் பொதுயிடங்களில் தொழுகை நடத்த அரசு தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் அவரவர் வீடுகளிலேயே தொழுகை நடத்துமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அதேபோல இஸ்லாமியர்கள் அவரவர்களில் வீடுகளிலேயே தகுந்த இடைவெளியுடன் தொழுகை செய்து பக்ரீத் திருநாளை கொண்டாடிவருகின்றனர்.

இந்த நிலையில் இஸ்லாமிய பண்டிகை நாள்களில் பக்தர்களின் கூட்டம் நிரம்பி வழியும் உலக புகழ்பெற்ற நாகப்பட்டினம் நாகூர் தர்கா இன்று (ஆக.1) வெறிச்சோடி காணப்பட்டது. நாகூர் கலீபா சாஹிப் தெருவில் இஸ்லாமியர்கள் வீடுகளிலிருந்தபடியே தொழுகை நடத்தி, பக்ரீத் வாழ்த்துகளை பகிர்ந்து கொண்டனர்.

இதையும் படிங்க:பக்ரீத் நாளில் நம்மை நாமே தூய்மையாக்கிக் கொள்ள துணிவோம் - அதிமுக

ABOUT THE AUTHOR

...view details