தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

காவிரியில் வெள்ளப்பெருக்கு: உபரி நீர் வெளியேற்றம் - மீட்பு பணியில் மாவட்ட நிர்வாகம்

நாகப்பட்டினம்: தொடர் மழையால் காரைக்காலுக்கு வரும் காவிரியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் ஊர்களில் வெள்ளம் வராமல் இருக்க உபரி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

Excess water is being discharged
Excess water is being discharged

By

Published : Dec 4, 2020, 9:52 PM IST

புரெவி புயலால் கடந்த நான்கு நாட்களாக தமிழ்நாடு, புதுச்சேரி பகுதியில் தொடர் கனமழை பெய்து வருகிறது. மேலும் திருச்சி, கும்பகோணம் வழியாக காவிரி ஆறு கடைமடை பகுதியான காரைக்காலுக்கு பெரும் வெள்ளம்போல் சென்று கொண்டிருக்கிறது. இதனால் காரைக்காலை சுற்றியுள்ள விழுதியூர், திருமலைராயன் பட்டினம், செல்லூர், திருநள்ளார் ஊர்களிலும் வெள்ளப் பெருக்கு அபாயம் ஏற்பட்டுள்ளது.

இதனையடுத்து மாவட்ட ஆட்சியரின் உத்தரவின் பேரில் பொதுப்பணித்துறையினர் அரசலாறு ,திருமலைராயன்ஆறு, நூலாறு, நாட்டாறு உள்ளிட்ட முக்கிய ஆறுகளில் மதகுகளை திறந்து உபரி நீர்களை வெளியேற்றி வருகின்றனர். மேலும் வெள்ளம் நீர் அதிவேகத்துடன் வருவதால் பாலங்களையும் ஆய்வு செய்து வருகின்றனர்.

உபரி நீர் வெளியேற்றம்

அதேசமயம், தாழ்வான பகுதியில் உள்ள பொதுமக்களை அப்புறப்படுத்த பணியிலும் ஈடுபட்டுள்ளனர். மழையானது இன்று(டிச.4) இரவு தொடருமானால் ஊருக்குள் வெள்ளம் வர வாய்ப்பிருப்பதால் பொதுமக்களை வெளியேற்றுவது குறித்து ஆலோசனை செய்யப்படுவதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க: ஓராவி அருவியில் ஆர்ப்பரித்துக் கொட்டும் தண்ணீர்!

ABOUT THE AUTHOR

...view details