தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பயிற்சியின்போது வாட்ஸ்அப்பில் மூழ்கிய தேர்தல் அலுவலர்கள்! - election training issue

நாகை: தேர்தல் நடத்தும் உதவி அலுவலர்களுக்கான முதற்கட்ட பயிற்சியின்போது அதில் கவனம் செலுத்தாமல் ஆசிரியர்கள் வாட்ஸ்அப்பில் மூழ்கிய நிகழ்வு முகம் சுளிக்கவைத்துள்ளது.

election-training-issue
election-training-issue

By

Published : Dec 14, 2019, 9:00 PM IST

தமிழ்நாடு தேர்தல் ஆணையம் தமிழ்நாட்டில் இரண்டு கட்டமாக உள்ளாட்சித் தேர்தல் நடத்த இருப்பதை முன்னிட்டு, தமிழ்நாடு முழுவதும் உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடுவதற்காக ஆயிரக்கணக்கானோர் வேட்புமனுக்களை தாக்கல் செய்துவருகின்றனர்.

இந்நிலையில், வாக்குச்சாவடியில் பணியாற்றும் தேர்தல் நடத்தும்உதவிஅலுவலர்களுக்கு வாக்குப் பெட்டிகள், வாக்குச் சீட்டுகளை எவ்வாறு கையாளுவது குறித்த பல்வேறு பயிற்சிகள் நாகை தனியார் கல்லூரியில் இன்று அளிக்கப்பட்டது. உயர் அலுவலர்கள் ஆர்வத்துடன் பயிற்சியளித்துக் கொண்டிருந்தபோது, கண்டுகொள்ளாமல் பயிற்சியில் கலந்துகொண்ட தேர்தல் அலுவலர்கள் ஆர்வத்துடன் தங்களது செல்போன்களில் சினிமா படங்களைப் பார்த்துக்கொண்டிருந்தனர்.

மேலும், காதில் ஹெட்போனை மாட்டிக்கொண்டு சுவாரஸ்யமாக பாடல் கேட்டுக்கொண்டும் வாட்ஸ்அப்பில் மூழ்கியபடியும் போன் பேசிக்கொண்டும் பயிற்சியை கவனிக்காமல் இருந்த சம்பவம் அங்கிருந்த உயர் அலுவலர்களை முகம் சுளிக்கவைத்தது.

பயிற்சியில் கவனம் செலுத்தாமல் செல்போனில் படம் பார்த்த ஆசிரியர்கள்

இந்நிலையில், முதல்கட்ட பயிற்சி இன்று நிறைவுற்ற நிலையில் அடுத்தகட்டமாக வருகிற 23ஆம் தேதி இரண்டாம்கட்ட பயிற்சியும் அதனைத் தொடர்ந்து மூன்றாம் கட்ட பயிற்சியும் அளிக்கப்படும் என அலுவலர்கள் தெரிவித்தனர்.

அப்போது பேசிய அலுவலர், தேர்தல் நடத்தும்உதவிஅலுவலர்கள் நேர்மையுடன் அரசியல் சார்பற்று நடுநிலையாக வாக்குச்சாவடிகளில் பணியாற்ற வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டார்.

இதையும் படிங்க:

நாகை தேர்தல் பயிற்சி முகாம் - ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details