மயிலாடுதுறை நகராட்சி 3வது வார்டு மேல ஆராய தெருவில் 100-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இங்கு இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக, பாதாள சாக்கடை நீர் சாலையில் வழிந்து தேங்கி நிற்பதால் துர்நாற்றம் வீசி வருகிறது. மேலும், நகராட்சி வழங்கும் குடிநீரில் பாதாள சாக்கடை கழிவுநீர் கலந்து வருவதால் தொற்று நோய் ஏற்படுவதாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் அரசுப் பேருந்தை வழிமறித்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
குடிநீரில் சாக்கடை நீர் கலப்பு - மறியலில் ஈடுபட்ட மக்கள்! - drinking water
மயிலாடுதுறை: குடிநீரில் பாதாள சாக்கடை நீர் கலப்பதாகவும், சாலையில் வழிந்தோடும் கழிவுநீரால் துர்நாற்றம் வீசுவதாகவும் கூறி நகராட்சி நிர்வாகத்தைக் கண்டித்து 3ஆவது வார்டை சேர்ந்த பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
![குடிநீரில் சாக்கடை நீர் கலப்பு - மறியலில் ஈடுபட்ட மக்கள்!](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-3443109-455-3443109-1559388407461.jpg)
சாலை மறியில் ஈடுபட்ட மக்கள்
இச்சம்பவம் குறித்து நகராட்சி நிர்வாகத்திடம் பலமுறை புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்காததால் இரண்டாவது முறையாக சாலை மறியலில் ஈடுபட்டதாக அவர்கள் கூறினர். இதனால் மயிலாடுதுறை - மணல்மேடு செல்லும் சாலையில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிப்படைந்தது.
சாலை மறியில் ஈடுபட்ட மக்கள்
சம்பவ இடத்திற்கு வந்த மயிலாடுதுறை காவல் நிலையத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததன் பேரில் போராட்டம் கைவிடப்பட்டது.