நாகை மாவட்டத்தில் மயிலாடுதுறை, சீர்காழி, திருக்குவளை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் வசிக்கும் பெரும்பாலானோர் காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் பொதுமக்கள் மிகுந்த அச்சத்தில் உள்ளனர். நாகையிலுள்ள 12 அரசு மருத்துவமனைகளில் நாளுக்கு நாள் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் உள் மற்றும் வெளி நோயாளிகளாகச் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
நாளுக்கு நாள் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் கூடுதல் அறைகள் ஒதுக்கப்பட்டு நோயாளிகளுக்குச் சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது. இந்தச் சூழ்நிலையில் நாகை மாவட்ட மருத்துவ இணை இயக்குநர் கலா செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார்.
அப்போது, "கடந்த அக்டோபர் மாதம் 25,680 வெளி நோயாளியாகவும் 6,664 பேர் உள்நோயாளியாகவும் காய்ச்சல் தொடர்பாகச் சிகிச்சை பெற்றுள்ளனர். இதில் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட 77 பேருக்கு சிகிச்சையாக்கப்பட்டுள்ளது. அவர்கள் அனைவரும் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.