மயிலாடுதுறை:குத்தாலம் பேரூராட்சியில் நதியா, விஜயா, வேம்பு, ராதிகா ஆகிய நான்கு பெண்கள் சுகாதாரப் பரப்புரையாளர்களாக வேலை பார்த்துவந்தனர்.
- வீடுகள்தோறும் சுகாதாரப் பணிகளை மேற்கொள்வது குறித்து ஆய்வுசெய்வது,
- டெங்கு கொசுக்கள் உற்பத்தியாகும் இடங்களைக் கண்டறிந்து பேரூராட்சிக்குத் தகவல் சொல்வது,
- வீடுகள்தோறும் மக்கும் குப்பை-மக்காத குப்பை என்று தரம் பிரித்துத்தர அறிவுறுத்துவது
போன்றவை இவர்களது பணிகளாகும். கடந்த ஏழு ஆண்டுகளாக ஒப்பந்த முறையில் பணியாற்றிவந்த இவர்களது ஒப்பந்தம் ஜூலை மாதத்துடன் முடிவடைந்தது. இந்த நான்கு பேரையும் வேலையிலிருந்து நீக்கிவிட்டு திமுகவைச் சேர்ந்தவர்களுக்கு அந்தப் பணிகள் அளிக்கப்பட்டதாகத் தெரிகிறது.
இதையடுத்து, மீண்டும் அந்தப் பணியைத் தங்களுக்கே வழங்க வேண்டும் எனப் பெண்கள் கோரிவந்த நிலையில், வேலைபோனதால் மனமுடைந்த நதியா வீட்டில் இருந்த எலி மருந்தை குடித்து தற்கொலைக்கு முயற்சி செய்தார்.