தமிழ்நாடு

tamil nadu

சீன இன்ஜின்களைப் பயன்படுத்தும் விசைப்படகுகள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி நாட்டுப்படகு மீனவர்கள் மனு!

By

Published : Feb 10, 2020, 8:34 PM IST

நாகை: சக்தி வாய்ந்த சீன இன்ஜின்களைப் பயன்படுத்தும் விசைப்படகுகளின் உரிமையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என நாட்டுப்படகு மீனவர்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளனர்.

நாகை மீனவர்கள் பிரச்னை  சீன என்ஜின் விசைப்படகுகள்  country boat fishers  நாகை மீனவர்கள் பிரச்னை  பைபர் படகு விசைப்படகு மீனவர்கள் பிரச்னை  பழையார் மீனவர் பிரச்னை  பழையார் மீனவர்கள்
சீன என்ஜின்களைப் பயன்படுத்தும் விசைப்படகுகளின் உரிமையாளர் மீது நடவடிக்கை எடுக்க கோரி மனு

நாகை மாவட்டம் பழையாரில், சீன இன்ஜினைப் பயன்படுத்துவது தொடர்பாக விசைப்படகு மீனவர்களுக்கும், பைபர் படகு மீனவர்களுக்கும் கடந்த ஏழு மாதங்களுக்கு முன்னர் பிரச்னை எழுந்தது. இந்த விவகாரம் தொடர்பாக நாகை மாவட்ட மீனவர்களுக்கு, ஆட்சியர் பிரவீன் நாயர், அரசால் தடைசெய்யப்பட்ட அதிக குதிரைத் திறன் கொண்ட சீன இன்ஜின் மற்றும் சுருக்குமடி வலைகளைப் பயன்படுத்தக்கூடாது என சுற்றறிக்கை அனுப்பினார்.

இதனை அலட்சியப்படுத்திய பழையாறைச் சேர்ந்த விசைப்படகு மீனவர்கள் தற்போது 250 முதல் 750 குதிரைத்திறன் கொண்ட சீன இன்ஜின்களைப் பயன்படுத்தி கடலில் மீன்பிடித்து வருகின்றனர். இதனால், பாதிப்புக்குள்ளான சிறு தொழில் செய்யும் பழையாறைச் சேர்ந்த பைபர் படகு மீனவர்கள், தடை செய்யப்பட்ட சீன இன்ஜின் மற்றும் வலைகளைப் பயன்படுத்தும் விசைப்படகு மீனவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி இன்று நாகை மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு அளித்தனர்.

சீன இன்ஜின்களைப் பயன்படுத்தும் விசைப்படகுகளின் உரிமையாளர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி மனு

இந்த விவகாரம் தொடர்பாக மாவட்ட நிர்வாகம் மற்றும் மீன்வளத்துறை உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்றால், கடலில் மீன்வளம் அழிவதுடன் வருங்கால மீனவ சந்ததியினரின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்படும் என அவர்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.

எனவே, அதிகக் குதிரைத் திறன் கொண்ட சீன இன்ஜின் பயன்படுத்துவதைத் தடை செய்து, மீன்வளத்தைக் காக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பழையார் மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதையும் படிங்க: தண்ணீர் பெறுவதில் பாகுபாடு கூடாது - ஏ.ஆர். ரகுமான்

ABOUT THE AUTHOR

...view details