மயிலாடுதுறை மாவட்டம் அரசு பெரியார் பொது மருத்துமனையில் கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு 14 நாள்கள் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த மருத்துவமனையில் உள்ள கரோனா சிறப்பு பிரிவில் 200 படுக்கை வசதிகள் அமைக்கப்பட்டுள்ன. மாவட்டத்தில் தொற்றால் பாதிக்கப்பட்ட 35 பேர் சீர்காழி அரசு மருத்துமனையிலும், 11 பேரை தனியார் கல்லூரி விடுதியிலும் தங்கவைக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்படுகிறது.
இந்நிலையில் மருத்துவமனையில் போதிய படுக்கை வசதி இல்லாததால் மாவட்டத்தில் கரோனாவால் பாதிக்கப்படும் நபர்களை வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொள்ள மருத்துவமனை நிர்வாகத்தினர் தெரிவித்து வருகின்றனர்.