நாகை மாவட்டம் சீர்காழி அருகே எடமணல் கிராமத்தில், அரசினர் உயர்நிலைப் பள்ளி இயங்கிவருகிறது. இந்தப் பள்ளியில் கொரோனா விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. இப்பேரணியை ஊராட்சிமன்ற தலைவர் பரிமளா தொடங்கிவைத்தார்.
பள்ளியிலிருந்து தொடங்கிய இந்தப் பேரணி சுமார் 2 கிலோமீட்டர் தொலைவிற்கு பிரதான சாலையில் சென்று முடிவடைந்தது. மேலும், பங்கேற்ற பள்ளி மாணவ, மாணவிகள் கையில் பதாகைகளை ஏந்தி, கொரோனா வைரஸ் குறித்து விழிப்புணர்வு வாசகங்களை உச்சரித்து, பொது மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தினார்.