தமிழ்நாட்டில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் உயர்ந்துகொண்டே செல்கிறது. இந்நிலையில், நாகை மாவட்டத்தைச் சேர்ந்த ஆறு பேருக்கு நேற்று கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதுவரையில் 11 பேர் நாகை மாவட்டத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
சீர்காழி தாலுக்கா பகுதியில் யாருக்கும் கரோனா தொற்று உறுதிசெய்யப்படவில்லை. ஆனால், டெல்லிக்குச் சென்று திரும்பிய நாகப்பட்டினத்தைச் சேர்ந்த கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்ட நபர், சீர்காழி சபாநாயகர் தெருவில் உள்ள அவரது உறவினர் வீட்டில் 15 நாள்கள் தங்கியுள்ளார்.