மயிலாடுதுறை மாவட்டம் வைத்தீஸ்வரன்கோவிலை அடுத்த பெருமங்கலம் கிராமத்தைச் சேர்ந்தவர் இந்திராணி(21). பள்ளிப் பருவத்திலிருந்தே விளையாட்டில் அதிக ஆர்வம் கொண்டவர். கல்லூரி படிப்பின்போதும் கைப்பந்து அணியில் இணைந்து விளையாடி வந்தார்.
கல்லூரிகளுக்கு இடையிலான போட்டிகளில் பல்வேறு வெற்றிகளை பெற்றிருக்கிறார். கல்லூரி படிப்பு நிறைவடைந்ததையடுத்து குரூப் 2 தேர்வுக்கு தயாராகி வருகிறார். இந்நிலையில் கடந்த பிப்ரவரி மாதம் நாமக்கல்லில் நடைபெற்ற மாநில அளவிலான கைப்பந்து போட்டியில் பங்கேற்று தங்கப்பதக்கம் வென்றார். பின்னர் கடந்த மார்ச் மாதம் கோவாவில் நடைபெற்ற தேசிய அளவிலான போட்டியில் பங்கேற்று தமிழ்நாடு சார்பில் விளையாடி மீண்டும் தங்கம் வென்றார்.