தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

இராசராச சோழன் சர்ச்சை; தமிழர்களிடம் ரஞ்சித் மன்னிப்பு கேட்க வேண்டும்! - Raja raja cholan issue

நாகை: மன்னர் இராசராச சோழன் பற்றி சர்ச்சைக்குரிய வகையில் பேசிய திரைப்பட இயக்குநர் பா. ரஞ்சித் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி, தமிழ்நாடு முக்குலத்துப் புலிகள் அமைப்பினர், மாவட்ட காவல் துறைக் கண்காணிப்பாளரிடம் புகார் மனு அளித்தனர்.

Mukkulam

By

Published : Jun 11, 2019, 4:02 PM IST

தஞ்சையை ஆண்ட மன்னர் இராசராச சோழன் தீண்டாமையைக் கடைப்பிடித்து, தலித் நிலங்களைப் பறித்துக் கொண்டார் என்று திரைப்பட இயக்குநர் பா. ரஞ்சித் விழா ஒன்றில் சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக கூறி தமிழ்நாடு முக்குலத்து புலிகள் அமைப்பினர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் பா. ரஞ்சித் மீது வழக்குப்பதிவு செய்து அவர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி நாகை மாவட்ட காவல்துறைக் கண்காணிப்பாளர் விஜயகுமாரிடம் புகார் மனு அளித்தனர்.

முக்குலத்து புலிகள் அமைப்பு

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த முக்குலத்துப் புலிகள் அமைப்பின் தலைவர் ஆறு. சரவணன், சமுதாய முன்னேற்றம் என்ற போர்வையில் இயக்குநர் பா. ரஞ்சித் சாதிவெறியை தூண்டும்படி பேசிவருகிறார். மன்னர் இராசராச சோழனை இழிவாகப் பேசிய ரஞ்சித், தமிழர்களிடம் பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும் என்றார்.

ABOUT THE AUTHOR

...view details