நாகையில் கரோனா தொற்று கடந்த சில நாள்களாக வழக்கத்தைவிட அதிகமாக பரவிவருகிறது. மாவட்டத்தில் இதுவரை 1,204 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
அதில், 632 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 558 பேர் மயிலாடுதுறை, நாகை, சீர்காழி உள்ளிட்ட அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். ஏற்கனவே 11 பேர் உயிரிழந்த நிலையில், நேற்று (ஆக.10) மூன்று பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். இதன்மூலம் இறப்பு எண்ணிக்கை 14ஆக உயர்ந்துள்ளது.