தமிழ்நாடு

tamil nadu

By

Published : Jul 30, 2023, 8:45 PM IST

ETV Bharat / state

முன்விரோதம் காரணமாக இரு தரப்பினர் இடையே மோதல்.. இருவருக்கு அரிவாள் வெட்டு மயிலாடுதுறையில் பரபரப்பு!

மயிலாடுதுறை முன்விரேதம் காரணமாக இருதரப்பினர் இடையே ஏற்பட்ட மோதலில் இருவருக்கு அரிவாள் வெட்டுபட்டு படுக்காயம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரனை செய்துவருகின்றனர்.

clash-between-two-parties-due-to-prior-enmity-2-persons-cut-with-sickle
கொலைவெறி தாக்குதல் நடத்திய பாலசுப்பிரமணியன்

இரு தரப்பினர் இடையே மோதல் இருவருக்கு அரிவாள் வெட்டு

மயிலாடுதுறை: குத்தாலம் தாலுகா பாலையூர் காவல் சரகத்துக்கு உட்பட்ட கோமல் கிராமத்தின் ஊராட்சி மன்றத் தலைவராக உள்ளவர் எழிலரசி. இவரது கணவர் பாலசுப்பிரமணியன் திமுக பிரமுகர் எனக் கூறப்படுகிறது. கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு கிராம நாட்டாண்மையாக இருந்த பாலசுப்பிரமணியன், கோமல் கிராமத்தில் திருமண மண்டபம் கட்டுவதாகக் கூறி அப்பகுதியில் உள்ள குளத்தில் மண் எடுத்து விற்பனை செய்ததாக கூறப்படுகிறது.

ஆனால் அந்த பணத்தில் தொடங்கப்பட்ட திருமண மண்டபம் கட்டுமான பணி பாதியில் நிறுத்தப்பட்டது. திருமண மண்டப கட்டுமான பணிக்கு செய்யப்பட்ட செலவை விட கூடுதலாக ரூ.40 லட்சம் வசூலிக்கப்பட்டதாகவும் அதற்கு கிராம மக்கள் கணக்கு கேட்டதாகவும் கூறப்படுகிறது. ஆனால் அவர் பாலசுப்பிரமணியன் கணக்கு காட்டவில்லை என சொல்லப்படுகிறது. இதனால், அவரை கிராம நாட்டாண்மை பொறுப்பில் இருந்து கிராம மக்கள் நீக்கி உள்ளனர்.

இதனால் இரு தரப்பினரிடையே முன்விரோதம் இருந்து உள்ளது. இந்நிலையில், பாலசுப்பிரமணியன் ஊராட்சி மன்ற அலுவலகம் கட்டுவதற்காக ஏற்கனவே திருமண மண்டபம் கட்ட வாங்கிய மணலை எடுத்ததாக கூறப்படுகிறது. இதனை கோமல் வடக்குத் தெருவைச் சேர்ந்த செல்வராஜ் (வயது 60), குணசேகர் (வயது 43) ஆகியோர் தட்டிக் கேட்டதாகவும் இதுகுறித்து பாலையூர் காவல் நிலையத்துக்கு புகார் தெரிவித்ததாகவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இதனால் ஆத்திரமடைந்த, பாலசுப்பிரமணியன் அவரது ஆதரவாளர்கள் 15 பேர் அரிவாள், உருட்டுக்கட்டை, கல் ஆகியவற்றை கொண்டு கொலைவெறி தாக்குதல் நடத்தியதாக தெரிவிக்கப்படுகிறது. இதில் செல்வராஜ், மற்றும் குணசேகர் ஆகியோர் தலையில் அரிவாள் வெட்டுபட்டு படுகாயம் அடைந்தனர்.

இருவரையும் மீட்டு அவரது உறவினர்கள் மயிலாடுதுறை அரசினர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்து உள்ளனர். இந்நிலையில், செல்வராஜ் மற்றும் குணசேகரன் மீது பாலசுப்பிரமணியன் மற்றும் அவரது ஆதரவாளர்கள் கொலைவெறி தாக்குதல் நடத்துவது தொடர்பான வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

இந்நிலையில் தாக்குதலில் ஈடுபட்ட பாலசுப்பிரமணியன், அவரது மகன் ராம்குமார், ரஞ்சித், காமராஜ் ஆகிய 4 பேர் மீது பாலையூர் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். இந்நிலையில், தாக்குதலில் ஈடுபட்ட பாலசுப்பிரமணியன் உள்ளிட்ட அனைவரையும் கைது செய்ய வேண்டும் என பாதிக்கப்பட்ட மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். ஊராட்சி மன்ற தலைவியின் கணவர் தாக்குதல் நடத்தியது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இதையும் படிங்க :குண்டாறு அணை பகுதியில் சுற்றுலா பயணிகளிடையே மோதல் - பரபரப்பு வீடியோ காட்சிகள் வைரல்!

ABOUT THE AUTHOR

...view details