தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மீனவர்களிடையே மோதல்: 4 விசைப் படகுகளுக்கு தீ வைப்பு! - கடலோர கிராமங்களில் பதற்றமான சூழல்

சீர்காழி அருகே வாணகிரி - பூம்புகார் மீனவர்களிடையே ஏற்பட்ட மோதல் காரணமாக, நிலைமையைக் கட்டுப்படுத்த காவல் துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.

ngp
வாணகிரி - பூம்புகார் மோதல்

By

Published : Aug 14, 2021, 5:34 PM IST

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியை அடுத்த பூம்புகார், திருமுல்லைவாசல், சந்திரபாடி பகுதிகளைச் சேர்ந்த கிராம மீனவர்கள்,தடையை மீறி சுருக்குமடி வலையுடன் இன்று மீன்பிடிக்கச் சென்றனர்.

இதையறிந்த மற்ற கிராம மீனவர்கள் பைபர் படகுகளில் அவர்களை வழிமறிக்க முயன்றனர். இதனால் கடலோர கிராமங்களில் பதற்றமான சூழல் ஏற்பட்டது.

சுருக்குமடி வலையுடன் சென்ற படகுகள் கரை திரும்பும் போது, வாணகிரி கிராமத்தைச் சேர்ந்த பைபர் படகின் மீது பூம்புகார் விசை படகு மோதியது. இதில் படகு உடைந்து மூழ்கிய நிலையில், அதிலிருந்த சிலம்பரசன்,வினோத் ஆகிய இருவர் காயமடைந்தனர்.

வாணகிரி - பூம்புகார் மீனவர்களிடையே மோதல்

இந்நிலையில், பூம்புகார் கிராமத்தைச் சேர்ந்த நான்கு விசை படகுகளுக்கு அடையாளம் தெரியாத நபர்கள் சிலர் தீ வைத்தனர்.

இதனால் இரண்டு கிராமங்களிலும் பதற்றம் ஏற்பட்டது. பதற்றமான சூழ்நிலையைக் கட்டுப்படுத்த நான்கு மாவட்ட காவல் துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

இதையும் படிங்க:பிறந்து 7 நாள்களே ஆன பெண் குழந்தைக்கு எருக்கம் பால் - பாட்டி கைது

ABOUT THE AUTHOR

...view details