தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

'மின்சார வாரியத்தில் ஒப்பந்த ஊழியர்களை நிரந்தரமாக்குங்கள்' -சிஐடியூ தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்!

நாகப்பட்டினம்: மின்சார வாரியத்தில் பணிபுரியும் ஒப்பந்த ஊழியர்களை நிரந்தர ஊழியராக பணி அமர்த்த வலியுறுத்தி சிஐடியூ தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்

By

Published : Feb 19, 2020, 4:53 PM IST

சிஐடியூ
சிஐடியூ

நாகையில் மின்சார வாரியம் மேற்பார்வை பொறியாளர் அலுவலகம் முன்பு சிஐடியூ தொழிற்சங்கத்தினர் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் சிஐடியூ தொழிற்சங்கத்தினர் நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு முழக்கங்களை எழுப்பினர்.

அதில், தமிழ்நாடு மின்சார வாரியத்தில் பணிபுரியும் ஒப்பந்த ஊழியர்களை நிரந்தர தொழிலாளர்களாக பணியமர்த்த வலியுறுத்தியும், தினக்கூலி 350 ரூபாய் வழங்க வேண்டும் போன்ற கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன.

சிஐடியூ தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

மேலும், தங்களது கோரிக்கைகளை சட்டப்பேரவைக் கூட்டத்தொடரில் தமிழ்நாடு அரசு நிறைவேற்றித் தரவில்லை என்றால் அரசுக்கு எதிராக அடுத்தக்கட்ட போராட்டத்தில் ஈடுபடப்போவதாக எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

இதையும் படிங்க:பயங்கரவாதிகள் 11 பேர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல்

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details