தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

நாகை ஆட்சியருடன் முதலமைச்சர் பழனிசாமி ஆலோசனை - nagapattinam district news

நாகப்பட்டினம்: நிவர் புயல் முன்னெச்சரிக்கை எற்பாடுகள் குறித்து மாவட்ட ஆட்சியருடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி காணொலி மூலம் ஆலோசனை மேற்கொண்டார்.

மாவட்ட ஆட்சியருடன் முதலமைச்சர் காணொலி மூலம் ஆலோசனை
மாவட்ட ஆட்சியருடன் முதலமைச்சர் காணொலி மூலம் ஆலோசனை

By

Published : Nov 24, 2020, 5:02 PM IST

வங்கக்கடலில் நிலைகொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நிவர் புயலாக மாறியுள்ளது. சென்னைக்கு கிழக்கே சுமார் 470 கி.மீ. தொலைவில் புயல் மையம் கொண்டுள்ளது. நிவர் புயல் இன்று (நவ.24) மாலை தீவிர புயலாக வலுப்பெற்று, மாமல்லபுரம்-புதுச்சேரி இடையே நாளை (நவம்பர் 25) மாலை தீவிர புயலாக கரையை கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதனால் கடலோர மாவட்டங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையில் அரசு அலுவலர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர் பிரவீன் பி நாயரிடம் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நிவர் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து காணொலி மூலம் ஆலோசனை மேற்கொண்டார்.

மாவட்ட ஆட்சியருடன் முதலமைச்சர் காணொலி மூலம் ஆலோசனை

அப்போது முதலமைச்சரிடம் பேசிய மாவட்ட ஆட்சியர், "நாகப்பட்டினத்தில் அனைத்து முன்னெச்சரிக்கை ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. தாழ்வான பகுதிகளில் உள்ள மக்கள் அனைவரும் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதுவரை கனமழை இல்லை. லேசான மழை தூரல் மட்டுமே உள்ளது" என்றார்.

இதையும் படிங்க: நிவர் புயல் எதிரொலி: பேரிடர் மீட்பு குழு புதுச்சேரி வருகை

ABOUT THE AUTHOR

...view details