கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் நடைபெறும் அரசு நிகழ்வொன்றில் கலந்துகொள்ள அங்கு வந்த தமிழ் ஆட்சிமொழி மற்றும் தமிழ்ப்பண்பாடுத் துறை அமைச்சர் கே. பாண்டியராஜனை, மாவட்ட நிர்வாகம் சார்பில் மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் மு. வடநேரே, காவல் துறை கண்காணிப்பாளர் ஸ்ரீ நாத் ஆகியோர் வரவேற்றனர்.
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர் கூறுகையில், “கடல்சார் தொல்லியல் துறையை உயிர்ப்பிக்க மத்திய அரசை தமிழ்நாடு முதலமைச்சர் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பான அறிவிப்பு, இந்தச் சட்டப்பேரவைத் கூட்டத்தொடரில் வெளிவர வாய்ப்புள்ளது.
ஆதிச்சநல்லூர் அகழ்வாய்வுப் பணிகள் குறித்த முழு ஆய்வு அறிக்கையை, ஏற்கனவே மத்திய அரசு இந்திய தொல்லியல் ஆய்வக அலுவலர்களிடம் ஒப்படைத்துள்ளது. இதனை இந்திய தொல்லியல் ஆய்வகம் ஆய்வுசெய்து விரைவில் வெளியிடுவார்கள்.