தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

விதிமுறைகளை மீறி குளத்தில் அள்ளப்பட்ட மணல் ரூ 11 லட்சத்திற்கு ஏலம் - மணல் ஏலம்

நாகை: குத்தாலம் அருகே விதிமுறைகளை மீறி குளத்தில் அள்ளப்பட்ட மணல் ஏலம் விடப்பட்டது.

sand
sand

By

Published : Nov 30, 2019, 7:24 AM IST

நாகை மாவட்டம் குத்தாலம் தாலுகா கோமல் கிராமத்தில் உள்ள பெரியகுளத்தில் கடந்த ஏப்ரல் மாதம் குளத்தை தூர்வார அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்களுக்கு மாவட்ட நிர்வாகம் அனுமதி வழங்கியது.

ஆனால், அரசு விதிகளை மீறி 3 அடி ஆழத்தைத் தாண்டி அதிக மண் எடுக்கப்பட்டது. இதையடுத்து, குத்தாலம் வருவாய் துறைக்கு புகார் வந்தது. இதனால் மணல் அள்ளுவதை தடுத்து நிறுத்தி சுமார் 1000 யூனிட் சவுடு மண்ணை பறிமுதல் செய்தனர். தற்போது பறிமுதல் செய்யப்பட்ட 1000 யூனிட் சவுடு மண் 10 லட்சத்திற்கு பொது ஏலம் விடப்பட உள்ளதாக கோட்டாட்சியர் கண்மணி அறிவித்தார்.

விதிமுறைகளை மீறி குளத்தில் அள்ளப்பட்ட மணல் ரூ 11 லட்சத்திற்கு ஏலம்

அதன் அடிப்படையில் இன்று குத்தாலம் வட்டாட்சியர் அலுவலகத்தில் பொது ஏலம் நடைபெற்றது. குத்தாலம் பகுதியைச் சேர்ந்த இமயவரம்பன் 11 லட்சத்து 50ஆயிரம் ரூபாய்க்கும் ஏலம் எடுத்தார்.

இதுபோல் அரசு பறிமுதல் செய்யும் பொருட்களை கிடப்பில் போடுவதால் வீணாகி யாருக்கும் உபயோகமில்லாமல் போய்விடுகிறது. ஆகவே பறிமுதல் செய்யும் பொருட்களை இதுபோல் ஏலம் விட்டால் பொதுமக்கள் யாரேனும் பயன்பெறுவர் என்பது மக்களின் கருத்தாக உள்ளது.

ABOUT THE AUTHOR

...view details