தமிழ்நாடு

tamil nadu

திருமாவளவன், திமுக ஐடி விங் நிர்வாகி மீது பாஜகவினர் புகார்

By

Published : Oct 23, 2020, 11:50 AM IST

மயிலாடுதுறை: இந்து மதத்தைச் சேர்ந்த பிராமண மற்றும் அனைத்துத் தரப்புப் பெண்களும் விலைமாதர்களாக படைக்கப்பட்டவர்கள் என்று சனாதான தர்மம் கூறுவதாக பேசிய தொல். திருமாவளவன் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி பாஜகவினர் காவல்நிலையத்தில் புகார் மனு அளித்தனர்.

திருமாவளவன், திமுக ஐடி விங் நிர்வாகிக்கு மீது பாஜகவினர் புகார்
திருமாவளவன், திமுக ஐடி விங் நிர்வாகிக்கு மீது பாஜகவினர் புகார்

மயிலாடுதுறை காவல் நிலையத்தில் பாஜக நகர தலைவர் மோடி, கண்ணன் தலைமையிலான அக்கட்சியினர் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் மீது புகார் மனு அளித்தனர்.

அம்மனுவில் 'விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் இந்து மதத்தைச் சேர்ந்த பிராமண மற்றும் அனைத்துத் தரப்புப் பெண்களும் விலைமாதர்களாக படைக்கப்பட்டவர்கள் என்று சனாதான தர்மம் கூறுவதாக சர்ச்சைக்குரிய முறையில் பேசியதற்கு அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் பாரதப் பிரதமர் நரேந்திர மோடி, தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட தலைவர்களை அவதூறாக சித்தரித்து புகைப்படம் வெளியிட்ட திமுக ஐடி விங் நிர்வாகி மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும்' என தெரிவித்திருந்தனர்.

இதையும் படிங்க... மோடி அரசு சமூக நீதிக்கு எதிரான அரசு - தொல். திருமாவளவன் குற்றச்சாட்டு!

ABOUT THE AUTHOR

...view details