திண்டுக்கல்: நிலக்கோட்டை தாலுகா அம்மையநாயக்கனூர் பேரூராட்சியில் 6ஆவது வார்டு பதவிக்குப் போட்டியிடும் பாஜக பெண் வேட்பாளர் ராணி நேற்று முன்தினம் இரவு ஒருத்தட்டு, பொம்மனம்பட்டி ஆகிய பகுதிகளில் முதல் நாள் தேர்தல் பரப்புரையை முடித்துவிட்டு காரில் வீடு திரும்பிக்கொண்டிருந்தார்.
அப்போது வழியில் இடைமறித்த அமமுக வேட்பாளர் சன்மதியின் கணவர் ரவுடி பிரபாகரன், ரித்தீஷ் குமார் ஆகியோர் காரின் மீது சராமாரியாக கற்களை விட்டு எரிந்ததில் முன்பக்க கண்ணாடி சேதமடைந்து ராணியின் தலையில் பட்டு பலத்த காயம் ஏற்பட்டது.