தமிழ்நாடு

tamil nadu

By

Published : Apr 21, 2020, 3:46 PM IST

ETV Bharat / state

நாட்டுப்புற கலைஞர்களுக்கு வழங்கப்பட்ட 'மோடி கிட்'

நாகப்பட்டினம்: மயிலாடுதுறை பகுதியில் வசிக்கும் நாட்டுப்புற கலைஞர்களுக்கு பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் மோடி கிட் வழங்கப்பட்டது.

நாட்டுப்புற கலைஞர்களுக்கு வழங்கப்பட்ட ‘மோடி கிட்’
நாட்டுப்புற கலைஞர்களுக்கு வழங்கப்பட்ட ‘மோடி கிட்’

கரோனா வைரஸ் தொற்றுக் காரணமாக தற்போது இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதன் விளைவாக தினக் கூலியாக வேலை செய்யும் மக்கள் அனைவரும் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மேலும் வருமானம் பாதிக்கப்பட்டு தங்கள் வாழ்வாதாரத்தை இழந்துள்ள நாகை மாவட்டம், மயிலாடுதுறைப் பகுதியில் வசிக்கும் நாட்டுப்புற கலைஞர்களுக்கு பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் 'மோடி கிட்' வழங்கப்பட்டது.

நாட்டுப்புற கலைஞர்களுக்கு வழங்கப்பட்ட ‘மோடி கிட்’

இந்நிலையில் மயிலாடுதுறை பாஜக அலுவலகத்தில் நகரச் செயலாளர் மோடி கண்ணன் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பாஜக நிர்வாகிகள் பங்கேற்று, நாட்டுப்புற கலைஞர்கள் 25 பேருக்கு அரிசி, மளிகைப் பொருட்கள், காய்கறிகள், முகக் கவசங்கள் ஆகியன அடங்கிய "மோடி கிட்" களை வழங்கினர்.

இதுபோன்று ஏழை மக்களுக்கு தமிழ்நாடு முழுவதும் பாஜக சார்பில் மோடி கிட் வழங்கப்பட்டு வருவதாக மோடி கண்ணன் கூறினார்.

இதையும் படிங்க: ம.பி.யில் அமைச்சரவை விரிவாக்கம்: சிந்தியா ஆதரவாளர்களுக்கு அமைச்சர் பதவி

ABOUT THE AUTHOR

...view details