தமிழ்நாடு

tamil nadu

By

Published : Apr 11, 2022, 5:16 PM IST

ETV Bharat / state

Video: செல்லப்பிராணிக்குச் சீமந்தம் செய்து அழகு பார்த்த குடும்பம்!

சீர்காழியில் வீட்டில் வளர்ந்து வந்த வளர்ப்பு நாய் கருவுற்றிருந்த நிலையில், அதற்குச் சீமந்தம் செய்து அக்குடும்பத்தினர் அழகு பார்த்தனர்.

baby shower for pet dog  baby shower for dog  baby shower for pet dog in sirkazhi  sirkazhi dog baby shower  நாக்குட்டிக்கு வளைகாப்பு  நாய்க்கு சீமந்தம் செய்த உரிமையாளர்  சீர்காழியில் வளர்ப்பு நாய்க்கு சீமந்தம்  வளர்ப்பு நாய்க்கு சீமந்தம்  சீர்காழியில் நாய்குட்டிக்கு சீமந்தம்
செல்லப்பிராணிக்கு சீமந்தம்

மயிலாடுதுறை: சீர்காழி மதீனா நகரைச் சேர்ந்த தம்பதியரின் மகன்களான நிதீஷ் குமார் மற்றும் சிவராஜ், தங்களது உறவினர் வீட்டில் இருந்து நாய்க்குட்டி ஒன்றை எடுத்து வந்து வளர்த்து வந்தனர். அதற்கு 'சிக்கி' எனப்பெயர் சூட்டினர். குடும்பத்தில் ஒரு அங்கத்தினராக மாறிய நாய்க்குட்டி, வீட்டில் உள்ள அனைவரிடமும் அதீத பாசத்துடன் பழகி வருகிறது.

தற்போது 'சிக்கி' கருவுற்றுள்ளது. வீட்டில் அங்கத்தினராக வளர்ந்து வந்த நாய்க்குட்டியை, தங்களது பெண் குழந்தை போல் கருதி, அதற்கு சீமந்தம் செய்ய வேண்டும் என நினைத்துள்ளனர். அதன்படி, அப்பகுதியை சேர்ந்த பொதுமக்களுக்கு சீமந்த அழைப்பையும் விடுத்துள்ளனர்.

செல்லப்பிராணிக்கு சீமந்தம்

அழைப்பை ஏற்ற பொதுமக்கள், சிக்கியின் சீமந்தத்தில் கலந்துகொண்டு, நிகழ்ச்சியை சிறப்பித்தனர். மேலும் சிக்கிக்கு சந்தனம், மஞ்சள், குங்குமம் இட்டு சீமந்தம் செய்து மகிழ்ச்சியுடன் கொண்டாடினர்.

இதையும் படிங்க: உறவினர்கள் படை சூழ செல்லப்பிராணிக்கு வளைகாப்பு!

ABOUT THE AUTHOR

...view details