மயிலாடுதுறை : மாவட்ட காவல் துறை மற்றும் மாவட்ட உணவு உற்பத்தியாளர்கள் சங்கம் சார்பில் ஊழியர்களுக்கு இலவச ஹெல்மெட் வழங்கும் நிகழ்ச்சி இன்று(ஆக.1) மயிலாடுதுறை பேருந்து நிலையம் அருகே நடைபெற்றது. மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் என்.எஸ்.நிஷா பங்கேற்று விலையில்லா ஹெல்மெட்டுகளை ஹோட்டல், பேக்கரி மற்றும் ஸ்வீட் ஸ்டாலில் பணி புரியும் ஊழியர்களுக்கு வழங்கினார்.
தொடர்ந்து தலைக்கவசம் உயிர்க்கவசம் ஹெல்மெட் அணிவதன் அவசியம் குறித்து காவல்துறையினர் மற்றும் பொதுமக்கள் ஹெல்மெட் அணிந்து பங்கேற்ற விழிப்புணர்வு பேரணியை கொடியசைத்து தொடங்கி வைத்தார். பேருந்து நிலையத்தில் புறப்பட்ட பேரணி முக்கிய வீதிகள் வழியாக சென்றது.
ஹெல்மெட் அணிந்து வருபவர்களுக்கு ஹோட்டல் உரிமையாளர்கள் மற்றும் இருசக்கர வாகனங்கள் விற்பனை செய்வோர் சலுகைகள் அறிவிக்க வேண்டும் என்று காவல்துறை கண்காணிப்பாளர் கேட்டுக்கொண்டார்.