தமிழ்நாடு

tamil nadu

By

Published : May 10, 2021, 8:41 AM IST

ETV Bharat / state

காவலாளியைத் தாக்கி கோயிலில் கொள்ளை முயற்சி: போலீசார் விசாரணை

மயிலாடுதுறை: காவலாளியைத் தாக்கி விட்டு, கோயிலில் கொள்ளையடிக்க முயற்சித்த அடையாளம் தெரியாத நபர்கள் குறித்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

படித்துறை விஸ்வநாதர் கோயில் திருட்டு  படித்துறை விஸ்வநாதர் கோயில்  கோயிலில் கொள்ளைடியக்க முயற்சி  கோயில் கொள்ளை  மயிலாடுதுறை மாவட்ட செய்திகள்  காவலரை தாக்கி கொள்ளையடிக்க முயற்சி  Attempt to attack and rob the guard  Attempt to loot the temple  Temple robbery  Mayiladuthurai District News  Sri Padithurai Viswanathar Temple
Sri Padithurai Viswanathar Temple

மயிலாடுதுறை மாவட்டம், செங்கமேட்டுத் தெருவைச் சேர்ந்தவர் சாமிநாதன் (55). இவர் காவிரி ஆற்றங்கரையில் அமைந்துள்ள விசாலாட்சி சமேத படித்துறை விஸ்வநாதர் கோயிலில் இரவு காவலராகப் பணிபுரிந்து வருகிறார். இந்த கோயில் இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது.

சாமிநாதன் கோயிலிலேயே தங்கியுள்ளதால், அவரது மகன்கள் அவருக்கு உணவு கொண்டு வந்து கொடுப்பது வழக்கம். நேற்று (மே. 9) காலை சாமிநாதனின் மகன்கள் செந்தில், மணிகண்டன் ஆகியோர் கோயிலுக்கு வந்து பார்த்துள்ளனர். அப்போது, சாமிநாதன் தாக்கப்பட்டு படுகாயங்களுடன் மயங்கி கிடந்ததையும், சுவாமி சன்னதியின் பூட்டு உடைக்கப்பட்டிருந்தைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர்.

இந்த சம்பவம் குறித்து, மயிலாடுதுறை காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்த சாமிநாதனின் அவரது மகன்கள், அவரை சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக சாமிநாதன் திருவாரூர் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

சம்பவம் குறித்து தகவலறிந்து வந்த மயிலாடுதுறை துணை காவல் கண்காணிப்பாளர் அண்ணாதுரை தலைமையிலான காவலர்கள் கோயிலுக்கு வந்து பார்வையிட்டு விசாரணை நடத்தினர்.

முதற்கட்ட விசாரணையில், அதிகாலை சுவர் ஏறி குதித்து உள்ளே புகுந்த அடையாளம் தெரியாத நபர்கள், காவலாளி சாமிநாதனை தாக்கி விட்டு சுவாமி சன்னதி கதவின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்து அங்கிருந்த பீரோ, சில்வர் உண்டியலை உடைத்துள்ளனர். உண்டியலில் பணம் ஏதும் இல்லாததால் ஏமாற்றமடைந்த திருடர்கள், கோயிலில் வைக்கப்பட்டிருந்த சிசிடிவி கேமராவின் ஹார்ட் டிஸ்க்கை எடுக்க முயற்சித்துள்ளனர்.

ஹார்ட் டிஸ்க் எது என்று தெரியாததால் அங்கிருந்து தப்பி ஓடியது தெரிய வந்தது. இதைத் தொடர்ந்து, காவல் துறையினர் சிசிடிவியின் ஹார்ட் டிஸ்க்கை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இரண்டு நாள்களுக்கு முன்பு உண்டியலில் இருந்த ரூ.37 ஆயிரம் பணம் அலுவலர்களால் எடுக்கப்பட்டு வங்கியில் செலுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க:ஒரு மாத காலமாக பூட்டியிருந்த வீடு.. ஸ்கெட்ச் போட்டு திருடிய நபர்கள்

ABOUT THE AUTHOR

...view details