தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

அமமுகவின் வாக்கு இயந்திர முறைகேடு புகார்: தேர்தல் அலுவலர்கள் நிராகரிப்பு

நாகை: வாக்கு இயந்திரங்களில் முறைகேடு இருப்பதாக அமமுகவினர் அளித்த புகாரை தேர்தல் அலுவலர்கள் நிராகரித்தனர்.

By

Published : May 23, 2019, 5:46 PM IST

File pic

மயிலாடுதுறை மக்களவைத் தொகுதியில் பல்வேறு வாக்குச்சாவடிகளில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்திற்கு ஒரு வாக்கு கூட பதிவாகவில்லை.

இதனையடுத்து விவிபாட் இயந்திரத்தில் உள்ள ஒப்புகை சீட்டை சரிபார்க்க வேண்டும் என்று அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தினர் தேர்தல் அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தனர்.

ஆனால், உச்ச நீதிமன்ற உத்தரவுபடி ஒவ்வொரு சட்டமன்ற தொகுதியிலும் குலுக்கல் முறையில் 5 வாக்குப் பெட்டிகள், ஒப்புகை சீட்டை சரிபார்க்க முடியும் என்று தெரிவித்து புகாரை பெறுவதற்கு மறுத்துவிட்டனர்.

இது குறித்து அமமுக வேட்பாளர் செந்தமிழன் கண்டிப்பாக இந்த விவகாரத்தை நீதிமன்றத்திற்கு எடுத்துச் சென்று வழக்கு தொடருவோம் என்று தெரிவித்தார்.

ABOUT THE AUTHOR

...view details