மயிலாடுதுறை அருகே சோழம்பேட்டை கிராமத்தில் அம்பேத்கர் பிறந்த நாளன்று விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மண்டல செயலாளர் வேலு.குபேந்திரன் தலைமையில் திராவிடர் விடுதலைக் கழகம், பகுஜன் சமாஜ் கட்சியினர் அம்பேத்கர் இளைஞர் நற்பணி மன்ற பலகையை பொது இடத்தில் பொருத்த முயன்றபோது மாற்று சமூகத்தினர் அதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.
இதுதொடர்பான அமைதிப் பேச்சுவார்த்தை நேற்று (ஏப்.21) மயிலாடுதுறை வட்டாட்சியர் அலுவலகத்தில் வட்டாட்சியர் முருகானந்தம் தலைமையில் நடைபெற்றது. இதில் உடன்பாடு ஏற்படாத நிலையில், சோழம்பேட்டை கிராமத்தில் நற்பணி மன்றம் சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்குவதாக அறிவித்து அங்கு மன்ற நிர்வாகிகள் கூடினர். மேலும், நற்பணி மன்ற பலகையை பொருத்த ஏற்பாடு செய்தனர். இதையடுத்து அங்கு பாதுகாப்பு பணிக்காக காவல்துறையினர் குவிக்கப்பட்டனர். தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருப்பதால், நற்பணி மன்ற பலகையை பொருத்த காவல்துறையினர் அனுமதி மறுத்தனர்.