மயிலாடுதுறை: வட்டாட்சியர் அலுவலகம் முன்பு கட்டுமானம் மற்றும் அமைப்புசாரா தொழிலாளர்கள் கூட்டமைப்பு சார்பாக பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
மாநில கொள்கை பரப்புச் செயலாளர் முருகன் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் இணையவழி பதிவு, புதுப்பித்தல், கேட்புமனு சமர்ப்பித்தல் ஆகியவற்றை எளிமையாக்க வேண்டும், அதில் தொழிற்சங்க பரிந்துரையை கட்டாயமாக்க வேண்டும், புதுப்பித்துள்ள தகுதியான அனைவருக்கும் விடுபட்டு போன கரோனா நிவாரண நிதியை உடனடியாக வழங்க வேண்டும் போன்ற கோரிக்கைகள் முழக்கங்களாக முன்வைக்கப்பட்டது.