தமிழ்நாடு

tamil nadu

By

Published : Aug 2, 2020, 3:00 PM IST

ETV Bharat / state

கரோனா நெருக்கடி... களையிழந்த ஆடிப்பெருக்கு: வெறிச்சோடிய காவிரி கரையோரம்!

நாகப்பட்டினம்: காவிரி சங்கமம் மற்றும் ஈரோடு பண்ணாரி அம்மன் கோயிலில் பக்தர்களின்றி ஆடிப்பெருக்கு விழா களையிழந்து காணப்படுகிறது.

கரோனா நெருக்கடியால் களையிழந்த ஆடிப்பெருக்கு!
கரோனா நெருக்கடியால் களையிழந்த ஆடிப்பெருக்கு!

கொங்கு மண்டலத்தில் பிரசித்திப் பெற்ற கோயில்களில் ஒன்று பண்ணாரி அம்மன் கோயில். ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்துள்ள அடர்ந்த வனப்பகுதியில் இக்கோயில் அமைந்துள்ளது. ஆடிப்பெருக்கு, ஆடி வெள்ளி தினங்களில் இக்கோயிலில் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கூடுவது வழக்கம்.

ஆனால், கரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் கோயில் மூடப்பட்டுள்ளது. பக்தர்கள் வழிபாட்டிற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ள நிலையில், கோயிலில் அம்மனுக்கு நான்கு கால பூஜை மட்டும் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், ஆடி பெருக்கு நாளான இன்று (ஆகஸ்ட் 2) முழு ஊரடங்கு கடைப்பிடிக்கப்படுவதால், பக்தர்கள் யாரும் வராமல் கோயில் வளாகம் முழுவதும் வெறிச்சோடி காணப்படுகிறது.

இதைப் போலவே, நாகப்பட்டினம் மாவட்டம், பூம்புகாரில் காவிரி ஆறு சங்கமத்தில் கரோனா காரணமாக பொதுமக்கள் வருகையில்லாததால் ஆடிப்பெருக்கு விழா களையிழந்து காணப்படுகிறது.

இதையும் படிங்க: ஆடிப்பெருக்கை முன்னிட்டு கடைவீதிகளில் குவிந்த மக்கள் - காற்றில் பறந்த கட்டுப்பாடுகள்

ABOUT THE AUTHOR

...view details