தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பழிவாங்கத்துடிக்கும் பாதாளச்சாக்கடை; 25ஆவது முறையாக சாலையில் ஏற்பட்ட மெகா பள்ளம்!

மயிலாடுதுறையில் பாதாளச்சாக்கடை குழாய் உடைப்புக்காரணமாக 25ஆவது முறையாக சாலையில் ஏற்பட்ட மெகா பள்ளத்தால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.

By

Published : Jul 28, 2022, 10:07 PM IST

பழிவாங்க துடிக்கும் பாதாள சாக்கடை; 25-வது முறையாக சாலையில் ஏற்பட்ட மெகா பள்ளம்
பழிவாங்க துடிக்கும் பாதாள சாக்கடை; 25-வது முறையாக சாலையில் ஏற்பட்ட மெகா பள்ளம்

மயிலாடுதுறை நகராட்சியில் கடந்த 2007ஆம் ஆண்டு முதல் செயல்பாட்டில் உள்ள பாதாளச் சாக்கடைத்திட்டத்தில் கடந்த 3 ஆண்டுகளாக பல்வேறு இடங்களில் சாக்கடைக் குழாய் உடைந்து, அதன்காரணமாக மண் அரிப்பு ஏற்பட்டு சாலையில் மிகப்பெரிய பள்ளங்கள் உருவாகி பொதுமக்களை அச்சுறுத்தி வருகிறது.

இதுவரை 24 முறை மயிலாடுதுறை நகராட்சிக்கு உள்பட்ட பல்வேறு இடங்களில் பாதாளச்சாக்கடையால் சாலையில் பள்ளங்கள் ஏற்பட்டுள்ளன. இந்நிலையில், மயிலாடுதுறை ஐயாறப்பர் தெற்கு வீதியில் பாதாளச்சாக்கடை கழிவுநீரேற்று நிலையம் அருகில் இன்று மாலை சாலையில் மிகப்பெரிய அளவிலான பள்ளம் ஏற்பட்டது. நல்வாய்ப்பாக அப்போது சாலையில் ஆள் நடமாட்டமில்லாததால் விபத்து தவிர்க்கப்பட்டது.

இதையடுத்து, நகராட்சி ஊழியர்கள் உடனடியாக அவ்விடத்துக்குச்சென்று தடுப்புகளை வைத்து பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்ததோடு, பள்ளத்தை மண் கொண்டு நிரப்பி தற்காலிமாக சரிசெய்தனர்.

பழுதினை நிரந்தரமாக சரிசெய்யும் பணி நாளை தொடங்கும் என நகராட்சி அலுவலர்கள் தெரிவித்தனர். பிரதான சாலைகளில் அடிக்கடி பள்ளங்கள் ஏற்படுகிறது எனவும்; மிகப்பெரிய அசம்பாவிதம் ஏற்படுவதற்கு முன்னதாக அதனை நிரந்தரமாக சரிசெய்ய வேண்டும் எனவும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதையும் படிங்க:ஒருபக்கம் இஸ்லாமிய முறைப்படி துவா, மறுபக்கம் வேதமந்திரங்கள் முழங்க சுகாதார நிலையத்திற்கு அடிக்கல்!

ABOUT THE AUTHOR

...view details