தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

நாகையில் 900 லிட்டர் சாராயம் பறிமுதல் - கடத்திவந்தவர் தப்பியோட்டம்!

நாகபட்டினம்:  பெரம்பூர் அருகே காரில் கடத்திவரப்பட்ட 900 லிட்டர் சாராய பாக்கெட்டுகளை காவல்துறையினர் கைப்பற்றி, தப்பியோடிய ஓட்டுனரைத் தேடி வருகின்றனர்.

By

Published : Oct 25, 2019, 2:36 PM IST

naagapattinam

நாகப்பட்டினம் மாவட்டம் பெரம்பூரை அடுத்த வதிஷ்டாச்சேரி பகுதியில் காவல்துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியாக வந்த காரை காவலர்கள் நிறுத்தியுள்ளனர்.

காரை நிறுத்திய நபர் அங்கிருந்து ஓட்டம்பிடித்துள்ளார். சந்தேகமடைந்த காவல்துறையினர் காரை சோதனையிட்டனர். சோதனையில் காரில் 900 லிட்டர்
சாராயம் பாக்கெட்டுகளில் அடைத்து வக்கப்பட்டிருந்தது தெரியவந்தது.

900 லிட்டர் சாராயத்துடன் காரை கைப்பற்றிய பெரம்பூர் காவல்துறையினர், தப்பியோடிய நபர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிங்க: 188 கிலோ கஞ்சாவை காரில் கடத்தி வந்த இருவர் கைது

ABOUT THE AUTHOR

...view details