சாதனை புத்தகத்தில் தினந்தோறும் புதிய சாதனைகளை மூலம் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை தங்களது பெயர்களைப் பதித்துவருகின்றனர். இதை ஏன் செய்கிறாய் என்று கேட்பவர்களின் வாய்களை அடைக்கும்வகையில் அதையே தொடர்ச்சியாகச் செய்து உலக சாதனை புத்தகத்தில் இடம்பிடித்த நிகழ்வுகளும் உண்டு.
சமீபத்தில் 51 ஆயிரத்து 620 ஸ்டேப்ளர் பின்களைச் சங்கிலி போல் உருவாக்கி அதில் ஒரு உருவத்தையும் படைத்து உலகில் யாரும் செய்யாத உலக சாதனையை நமது சென்னை இளைஞர் கின்னஸ் புத்தகத்தில் இடம்பெற்றார். அந்த வகையில், தமிழ்நாட்டில் பிறந்த ஒவ்வொருவரும் தாய் மொழி தமிழ் மீது உள்ள ஆர்வத்தையும், மதிப்பையும் வெளிகாட்டும் வகையில் பல்வேறு முயற்சிகளைச் செய்துவருகின்றனர்.