தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சீர்காழியில் 5 ஆயிரம் ஏக்கர் சம்பா பாதிப்பு! - Sirkazhi Rain damage

மயிலாடுதுறை: சீர்காழியில் நான்காவது நாளாக தொடர்ந்து மழை பெய்து வருவதால் வீடுகள், வயல்களை மழைநீர் சூழ்ந்து, ஐந்தாயிரம் ஏக்கர் சம்பா பாதிக்கப்பட்டுள்ளது.

5 ஆயிரம் ஏக்கர் சம்பா பாதிப்பு  சீர்காழியில் 5 ஆயிரம் ஏக்கர் சம்பா பாதிப்பு  சீர்காழி மழை பாதிப்பு  5 thousand acres of samba affected in Sirkazhi  Sirkazhi Rain damage  5 thousand acres of samba affected
5 thousand acres of samba affected in Sirkazhi

By

Published : Dec 5, 2020, 5:52 PM IST

மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி தாலுகா முழுவதும் பல்வேறு பகுதிகளில் நான்கு நாள்களாக தொடர்ந்து பெய்து வந்த கனமழையால் தாழ்வான பகுதியில் உள்ள வீடுகள், நெற்பயிரில் தண்ணீரில் மூழ்கியது. இன்று மதியம் (டிச.05) முதல் மழை படிப்படியாக குறைந்து இரவு முதல் விட்டு விட்டு மிதமான மழை பெய்து வருகிறது.

இந்நிலையில், சீர்காழி அருகே வடரங்கம், கொண்டல் கிராமத்தில் நான்காவது நாளாக தொடர்ந்து மழை பெய்து வருவதால், தாழ்வான பகுதியில் உள்ள வீடுகளை தண்ணீர் சூழ்ந்துள்ளது. இதனால், அப்பகுதி மக்கள் வீடுகளில் முடங்கியுள்ளனர். மேலும் இங்குள்ள தெற்கு ராஜான் வாய்க்கால், உப்பனாறு ஆகியவைகளில் தண்ணீர் வழிந்து விளைநிலம் வழியாக ஊருக்குள் புகுந்துள்ளது.

இந்தப் பகுதியில் வடிகால் வசதிகள் முறையாக தூர்வாராமல் இருப்பதால் வீடு, வயல்களில் சூழ்ந்துள்ள தண்ணீர் வடிவதற்கு வழி இல்லாமல் தேங்கியுள்ளது. மேலும் சுமார் ஐந்தாயிரம் ஏக்கர் சம்பா சாகுபடி பாதிக்கப்பட்டுள்ளது.

தொடர்ந்து நான்காம் நாளாக மயிலாடுதுறை மாவட்டத்தில் சீர்காழி, கொள்ளிடம், வைத்தீஸ்வரன் கோயில், பூம்புகார் உள்ளிட்ட இடங்களில் தொடர்ந்து மழை பெய்து வருவதால். மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கி உள்ளது.

இதையும் படிங்க:நெல் பயிர்களைத் தாக்கும் ஆனைக்கொம்பன் ஈ: நூறு ஏக்கர் சம்பா பயிர்கள் சேதம்

ABOUT THE AUTHOR

...view details