நாகப்பட்டினம்:நாகப்பட்டினம் கீச்சாங்குப்பம் சேவாபாரதியை சேர்ந்தவர் சிவா. இவருக்குச் சொந்தமான விசைப்படகில் நாகை துறைமுகத்திலிருந்து கடந்த புதன் (பிப்ரவரி 23) காலை 9 மீனவர்களுடன் கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றனர். மாலை மீன்பிடித்துக் கொண்டிருந்த போது அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்ட இலங்கை கடற்படையினர் எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி அங்கு இருந்த மீனவர்களைச் சிறை பிடித்தனர்.
நாகை கீச்சாங்குப்பம் சேவா பாரதியைச் சேர்ந்த சின்னதுரை (60), சிவபாரதி ( 27 ),சௌந்தர்ராஜன் (34 ),உள்ளிட்ட 9 மீனவர்களை படகுடன் கைது செய்து யாழ்ப்பாணம் மயிலிட்டி மீன்பிடி துறைமுகத்திற்கு அழைத்துச் சென்றனர்.