நாகை மாவட்டம் மயிலாடுதுறை கீழபட்டமங்கலத்தில் 14 ஏக்கர் பரப்பளவு கொண்ட பெரிய குளம் ஒன்றுள்ளது. இக்குளம் அதனைச் சுற்றியுள்ள பட்டமங்கலம், கீழப்பட்டமங்கலம், பெசன்ட் நகர், சீனிவாசபுரம் உள்ளிட்ட பகுதிகளுக்கு முக்கிய நீர் ஆதாரமாக விளங்குகிறது.
காவிரியில் தண்ணீர் திறக்கப்படும் போது கீழப்பட்டமங்கலம் வாய்க்கால் வழியாக இக்குளத்திற்கு நீர்வருவது வழக்கம். சமீபகாலமாக கீழப்பட்டமங்கலம் வாய்க்காலில் குடியிருப்புவாசிகள் சாக்கடை நீரை கலப்பதாலும், ஆக்கிரமிப்பு செய்வதாலும் வாய்க்காலில் நீர் செல்ல தடை ஏற்படுகிறது.